தமிழ்நாடு

ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு

Published On 2023-11-19 06:13 GMT   |   Update On 2023-11-19 06:13 GMT
  • விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.
  • ஆய்வின் போது ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, டாக்டர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் உடன் இருந்தனர்.

காஞ்சிபுரம்:

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அறிஞர் அண்ணா அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது டாக்டர்கள் மற்றும் அலுவலர்களின் வருகை பதிவேட்டை பார்வையிட்டு, பெண்கள் உள் நோயாளிகளின் பிரிவு. குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையின் விவரம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் ஆஸ்பத்திரியின் சுற்றுப்புறங்களை பார்வையிட்டு தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு டாக்டர்களுக்கு கலெக்டர் கலைச் செல்வி மோகன் அறிவுரை வழங்கி, மருந்தகத்தில் மருந்துகள் இருப்புகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் கலைச்செல்வி மோகன், ஸ்ரீபெரும்புதூர்- ஓரகடம் கூட்டு சாலையில் நடைபெறும் சாலை விரிவாக்க பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, டாக்டர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News