தமிழ்நாடு

3 மாவட்டத்திற்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2022-06-27 06:06 GMT   |   Update On 2022-06-27 06:06 GMT
  • முதல்-அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
  • ஆம்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேலூர்:

வேலூர், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலகங்கள், விரிவுபடுத்தப்பட்ட வேலூா் புதிய பஸ் நிலையம் ஆகியவற்றின் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை வருகிற 29,30-ந்தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த விழாக்களில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 28-ந்தேதி இரவு 7 மணியளவில் ஆம்பூருக்கு வருகிறார்.

தொடா்ந்து, அவா் 29-ந் தேதி காலை 11 மணிக்கு திருப்பத்தூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தைத் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

பின்னர் வேலூர் வருகிறார். மதியம் 12.30 மணிக்கு விரிவுபடுத்தப்பட்ட வேலூா் புதிய பஸ் நிலையத்தைத் திறந்து வைக்கிறார். மாலை 4 மணியளவில் வேலூா் கோட்டை மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

30-ந் தேதி காலை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தைத் திறந்து வைத்து அங்கும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். பின்னா், சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.

இந்த விழாக்களில் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், அரசுத் துறை உயரதிகாரிகள் பங்கேற்கின்றனா். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையொட்டி விழா நடைபெறும் இடங்களில் மீண்டும் பணிகள் நடந்து வருகிறது. ராணிப்பேட்டை, வேலூர் திருப்பத்தூர் பகுதிகளில் தீவிர சுகாதாரப் பணிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகளும் நடந்து வருகிறது.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆம்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதல்வர் வருகையின் போது செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து அவர் உத்தரவிட்டார்.

முதல்-அமைச்சர் வருகை உறுதியானதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Tags:    

Similar News