தமிழ்நாடு செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: மாமல்லபுரம் நகரம் வண்ண ஓவியங்கள்- பூங்காக்களால் புதுப்பொலிவு

Published On 2022-07-05 13:38 IST   |   Update On 2022-07-05 13:38:00 IST
  • மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் சர்வதேச “செஸ் ஒலிம்பியாட்” போட்டி தொடங்குகிறது.
  • மாமல்லபுரம் புதுபொலிவுடன் காட்சியளிக்க தொடங்கி உள்ளது. இது பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் சர்வதேச "செஸ் ஒலிம்பியாட்" போட்டி தொடங்குகிறது. இந்த போட்டி ஆகஸ்ட் 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.

போட்டியில் கலந்து கொள்ள 188 நாடுகளில் இருந்து வெளிநாட்டு செஸ் வீரர்கள் உள்பட 2,500 பேர் வர உள்ளனர். அவர்கள் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களையும் சுற்றிப் பார்க்கிறார்கள்.

இதையடுத்து மாமல்லபுரம் நகரம் புதுப்பொலிவு பெரும் வகையில் பணிகள் நடந்து வருகின்றது. சுவர், பூங்கா, சிற்பங்கள், கடைவீதி, கோயில், குளம், சாலை, நுழைவு வாயில் என அனைத்து பகுதிகளையும் அலங்காரம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

பூங்காக்களில் நீர் அலங்காரம், சுவர்களில் தமிழ் பாரம்பரிய, வரலாற்று, சரித்திரங்களை நினைவு படுத்தும் வகையில் இயற்கையுடன் இணைத்து தத்ரூபமாக வண்ண ஓவியங்கள் படங்கள் வரையப்பட்டு வருகிறது. கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர் சாலையோரம் செஸ் ஒலிம்பியாட் விளம்பர பேனர், சின்னங்கள் வைக்கப்படுகிறது. சாலையின் நடுவே பலவகை அலங்கார செடிகள் வைக்கப்பட்டு வருகிறது. சாலையோர விதிமுறை குறியீடுகள் போர்டுகள் அனைத்தும், வெளிநாடுகளில் இருப்பது போன்று மாற்றப்பட்டு வருகிறது. இதனால் மாமல்லபுரம் புதுபொலிவுடன் காட்சியளிக்க தொடங்கி உள்ளது. இது பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

Tags:    

Similar News