தமிழ்நாடு

வார்டு கமிட்டி பற்றி தெரியாத சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Published On 2022-08-16 06:31 GMT   |   Update On 2022-08-16 06:31 GMT
  • அரசு விதிமுறைகளை அறிவித்து வெளியிடும் போது அதுபற்றி மக்கள் பிரதிநிதிகளுக்கு புரிய வைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்ததில் இல்லை என்பதே தெரிய வந்துள்ளது.
  • 75 சதவீதம் கவுன்சிலர்கள் ஏரியா சபை என்றால் அது என்ன என்று திருப்பி கேட்கும் நிலையில்தான் இருக்கிறார்கள்.

சென்னை:

நம்ம கவுன்சிலர்கள் எப்படி இருக்கிறார்கள்? மாநகராட்சி விதிமுறைகள் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்களா? என்பது பற்றி 'வாய்ஸ் ஆப் பீப்பிள்' என்ற குடிமக்கள் குழு அமைப்பு ஒரு சர்வே நடத்தி இருக்கிறது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 கவுன்சிலர்களில் 110 பேர் மட்டுமே போன் தொடர்பில் சிக்கி இருக்கிறார்கள். அவர்களிடம் மட்டும் கேள்விகளை கேட்டு இருக்கிறார்கள்.

அரசு விதிமுறைகளை அறிவித்து வெளியிடும் போது அதுபற்றி மக்கள் பிரதிநிதிகளுக்கு புரிய வைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்ததில் இல்லை என்பதே தெரிய வந்துள்ளது.

75 சதவீதம் கவுன்சிலர்கள் ஏரியா சபை என்றால் அது என்ன என்று திருப்பி கேட்கும் நிலையில்தான் இருக்கிறார்கள்.

2010 மாநகராட்சி சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வாக்கு கமிட்டி பற்றி அவர்களுக்கு புரிதல் இல்லை. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (வார்டு கமிட்டிகள் மற்றும் ஏரியா சபை) விதிகள் 2022-ன் படி கவுன்சிலர்கள், வார்டு கமிட்டிகள், பகுதி கவுன்சில்களின் தலைவர்கள் மற்றும் கவீனர்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

அரசு, மக்கள் பிரதிநிதிகள், மக்களை ஒருங்கிணைக்கும் தளம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து கொடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிராம சபைகள் பற்றி கூறியபோது அதைப்பற்றி திருப்பி கேட்டு இருக்கிறார்கள். 25 சதவீதம் பேர் ஊடகங்கள் வாயிலாக அறிந்ததாக கூறி இருக்கிறார்கள்.

Tags:    

Similar News