தமிழ்நாடு

சென்னை, திருவள்ளூரில் நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு

Published On 2024-01-19 08:52 GMT   |   Update On 2024-01-19 09:35 GMT
  • விடுமுறையை ஈடுகட்டும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருந்தது.
  • சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை சனிக்கிழமை செயல்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

சென்னை :

கடந்த டிசம்பர் மாதம் மிச்சாங் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டன.

இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருந்தது.

அந்த வகையில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை சனிக்கிழமை செயல்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Tags:    

Similar News