தமிழ்நாடு செய்திகள்

கட்டிட தொழிலாளி மகள் அழகி போட்டியில் மாநில அளவில் முதலிடம், தேசிய அளவில் இரண்டாம் இடம்

Published On 2022-12-22 14:02 IST   |   Update On 2022-12-22 14:02:00 IST
  • கடந்த 17-18ம் தேதிகளில் ஜெய்பூரில் தேசிய அளவில் மிஸ் இந்தியா அழகி போட்டி நடைபெற்றது.
  • பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 75 பேர் பங்கேற்றனர். இதில் கட்டிட தொழிலாளியின் மகளான ரக்சயா 2ம் இடத்தை பிடித்தார்.

மாமல்லபுரம்:

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நால்வர் கோயில் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மனோகர். கட்டிட தொழிலாளியான இவரது மகள் ரக்சயா (வயது.20) கல்லூரி படிப்பை முடித்துள்ளார். தன்னுடைய சிறு வயது முதல், தான் அழகிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு, குடும்ப வறுமையையும் பொருட்படுத்தாமல் தனது சொந்த முயற்சியில் பகுதி நேர வேலை செய்து தன்னை தயார்படுத்திக்கொண்டார்.

கடந்த 2018-ம் ஆண்டு நடந்த மோனோ ஆக்டிங் நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்று அரசு சார்பில் மலேசியா அழைத்து சென்று கெளரவித்தனர். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி ஜெய்பூரில நடந்த மாநில அளவிலான அழகி போட்டியில் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றார்.

தொடர்ந்து ஜெய்பூரில் கடந்த 17-18ம் தேதிகளில் ஜெய்பூரில் தேசிய அளவில் மிஸ் இந்தியா அழகி போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 75 பேர் பங்கேற்றனர். இதில் கட்டிட தொழிலாளியின் மகளான ரக்சயா 2ம் இடத்தை பிடித்தார். திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News