தமிழ்நாடு

வேடந்தாங்கல்-பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியது

Published On 2023-01-29 08:46 GMT   |   Update On 2023-01-29 08:46 GMT
  • தமிழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி வருடந்தோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பின்னர் நடைபெறும்.
  • பள்ளிக்கரணை பகுதியிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

மதுராந்தகம்:

தமிழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி வருடந்தோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பின்னர் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு நீர்பறவைகள், நிலப்பறவைகள் என இரண்டு பரிவாக நடைபெறுகிறது. இதில் நீர்பறவைகளின் கணக்கெடுப்பு நேற்று (28-ந்தேதி) தொடங்கியது. இது இன்று வரை நடைபெறுகிறது.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், நீர்நிலைப் பகுதிகள் மற்றும் பறவைகள் தங்கக் கூடிய பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

வன சரக அலுவலர் லெஸ்லி தலைமையில் வேடந்தாங்கல், கரிக்கிலி, மதுராந்தகம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் அதிநவீன தொலை நோக்கு கருவிகளைக் கொண்டு பறவைகள் கணக்கிடப்படுகிறது.

மதுராந்தகம் வன கோட்ட அலுவலர் வெங்கடேசன் தலைமையில் ஓதியூர் மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிகளிலும் வனத்துறை பணியாளர்களைக் கொண்டு பறவைகள் கணக்கிடப்படுகிறது. நேற்று காலை தொடங்கிய பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று மாலை வரை தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் பள்ளிக்கரணை பகுதியிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. பள்ளிக்கரணை, காரப்பாக்கம், பெரும்பாக்கம் சதுப்புநிலப் பகுதிகளில் வன அதிகாரிகள் நேற்று முதல் பறைவைகளை கணக்கெடுத்து வருகின்றனர்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மட்டும் 9 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதில் பறவை ஆர்வலர்கள், மாணவர்களும் பங்கேற்று கணக்கெடுத்து வருகின்றனர்.

நிலப்பறவைகளின் கணக்கெடுப்புபணி மார்ச் மாதம் 4-ந்தேதி மற்றும் 5-ந்தேதிகளில் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News