தமிழ்நாடு

புதுடெல்லிக்கு பார்சல் அனுப்ப சேலம் ரெயில் நிலையத்தில் தடை

Published On 2022-08-14 08:48 GMT   |   Update On 2022-08-14 08:48 GMT
  • சேலம் ரெயில்வே கோட்டத்தில் இருந்து இருசக்கர வாகனம், கொசுவலை உள்ளிட்டவை புதுடெல்லிக்கு பார்சல் அனுப்பப்படுகின்றன.
  • மற்ற ஊர்களுக்கு அனுப்பப்படும் பார்சலும் பலத்த பரிசோதனைக்கு பின்பே ரெயில்களில் ஏற்றப்படுகின்றன.

சேலம்:

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் ரெயில்களில் புதுடெல்லிக்கு பார்சல் அனுப்ப தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக சேலம் ரெயில்வே கோட்டத்தில் இருந்து நூல், பனியன், பட்டு வேஷ்டி, சேலை, இருசக்கர வாகனம், கொசுவலை உள்ளிட்டவை புதுடெல்லிக்கு பார்சல் அனுப்பப்படுகின்றன.

தற்போது இவற்றை அனுப்ப நாளை வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. மற்ற ஊர்களுக்கு அனுப்பப்படும் பார்சலும் பலத்த பரிசோதனைக்கு பின்பே ரெயில்களில் ஏற்றப்படுகின்றன.

Similar News