தமிழ்நாடு

நாளை ஆடிப்பெருக்கு: கனகாம்பரம் கிலோ ரூ.600-க்கு விற்பனை

Published On 2023-08-02 07:13 GMT   |   Update On 2023-08-02 07:13 GMT
  • நாளை ஆடிப்பெருக்கு என்பதால் பூக்கள் விலை சற்று அதிகரித்து உள்ளது.
  • வழக்கமாக தினசரி 40-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பூ விற்பனைக்கு குவிந்து வரும். இன்று 25 வாகனங்களில் மட்டும் பூக்கள் வந்தது.

போரூர்:

சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு திருவள்ளூர், வேலூர், ஓசூர், சேலம், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது. வழக்கமாக தினசரி 40-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பூ விற்பனைக்கு குவிந்து வரும். இன்று 25 வாகனங்களில் மட்டும் பூக்கள் வந்தது.

இந்த நிலையில் நாளை ஆடிப்பெருக்கு என்பதால் பூக்கள் விலை சற்று அதிகரித்து உள்ளது. கனகாம்பரம் கிலோ ரூ.600-க்கு விற்கப்பட்டது.

தற்போது சாமந்திப்பூவின் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் அதன் விலையும் அதிகரித்து ரூ.180 வரை விற்பனை ஆகிறது.

ஆடிப்பெருக்கையொட்டி பூ விற்பனை பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிகாலை முதலே மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து குறைந்து பூ விற்பனை மந்தமாகவே நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய பூக்கள் விலை விபரம் (கிலோவில்)வருமாறு :-

சாமந்தி-ரூ.120 முதல் ரூ.180 வரை

மல்லி- ரூ.450

ஐஸ் மல்லி- ரூ.350

கனகாம்பரம்- ரூ.600

முல்லை- ரூ.300

ஜாதி- ரூ.300

பன்னீர்ரோஸ்- ரூ.50 முதல் ரூ.80 வரை

சாக்லேட் ரோஸ் - ரூ.100 முதல் ரூ.120 வரை

அரளி - ரூ.200

சம்பங்கி -ரூ.120

சென்டு மல்லி - ரூ.50முதல் ரூ.60வரை

Tags:    

Similar News