50 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது
- மழையால் கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது.
- கட்டிடம் இடிந்து விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை:
சென்னையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இரவு மற்றும் பகலிலும் மழை பெய்து வந்த நிலையில் இன்று மழை நின்று சூரிய வெளிச் சம் ஏற்பட்டது.
இந்த நிலையில் திரு வல்லிக்கேணியில் பழமை யான கட்டிடம் ஒன்று இன்று பகலில் இடிந்து விழுந்தது. பாரதி சாலையில் உள்ள 50 ஆண்டு பழமை யான கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் உயிர் சேதம் எதுவும் ஏற்பட வில்லை. கட்டிடம் இடிந்து விழுந்த தில் அங்கு நின்ற கார், ஆட்டோ போன்ற வாகனங் கள் அப்பளம் போல் நொறுங்கின. அந்த பகுதி யில் அப்போது ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது.
தொடர்ந்து பெய்த மழை யால் கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது. தகவல் அறிந்து ஜாம்பஜார் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளை அகற்றி னார்கள்.
போலீஸ் விசாரணையில் அந்த கட்டிடம் கோபால் என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. பழமை யான கட்டிடம் இடிந்து விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.