தமிழ்நாடு

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 8 புதிய நீதிபதிகள்- உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை

Published On 2023-01-19 14:07 GMT   |   Update On 2023-01-19 14:07 GMT
  • புதிய நீதிபதிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • மத்திய அரசு புதிய நீதிபதிகளை நியமிக்கும் பட்சத்தில், நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயரும்.

சென்னை:

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. 5 வழக்கறிஞர்கள் மற்றும் 3 நீதித்துறை அலுவலர்களை நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்திருக்கிறது. இதையடுத்து புதிய நீதிபதிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரிந்துரை செய்யப்பட்ட நீதித்துறை அலுவலர்கள்:

1. பெரியசாமி வடமலை

2. ராமச்சந்திரன் கலைமதி

3. கோவிந்தராஜன் திலகவதி

பரிந்துரை செய்யப்பட்ட வழக்கறிஞர்கள்:

1. வெங்கடாச்சாரி லட்சுமிநாராயணன்

2. லெஷ்மண சந்திர விக்டோரியா கவுரி

3. பிள்ளைப்பாக்கம் பாகுகுடும்பி பாலாஜி

4. ராமசாமி நீலகண்டன்

5. கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன்

கடந்த 17ம் தேதி நடந்த கொலிஜியம் கூட்டத்தில், மேற்கண்ட பரிந்துரை தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் மொத்த எண்ணிக்கை 75 ஆகும். தற்போது 52 நீதிபதிகள் உள்ளனர். புதிய பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு, நீதிபதிகளை நியமிக்கும் பட்சத்தில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயரும்.

Tags:    

Similar News