தமிழ்நாடு

ரேசன் அரிசி, ரேசன் கோதுமை (கோப்பு படம்)

ரேசன் அரிசி, கோதுமை கடத்தல்- 193 பேர் கைது

Published On 2022-11-28 19:43 GMT   |   Update On 2022-11-28 19:43 GMT
  • ஒரு வாரத்தில் 447 குவிண்டால் ரேசன் அரிசி கடத்தல்.
  • கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 54 வாகனங்கள் பறிமுதல்,

தமிழக அரசின் பொது விநியோகத் திட்டம், சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் உணவு பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரேசன் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த பொருட்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று வருவதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது.

இதை தடுக்கும் வகையில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் மாநிலம் முழுவதும் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு, ரேசன் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 14.11.2022 முதல் 20.11.2022 வரையிலான ஒரு வார காலத்தில் கள்ளச் சந்தையில் விற்பதற்காக கடத்தப்பட இருந்த ரூ, 53,71,209/- மதிப்புள்ள 9447 குவிண்டால் ரேசன் அரியை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

மேலும் 25 லிட்டர் ரேசன் மண்ணெண்ணெய், 144 கிலோ கோதுமை, இலவச எரிவாயு திட்டத்தின் கீழ் வழங்கப்பட இருந்த 41 எரிவாயு உருளைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 54 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட 193 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News