தமிழ்நாடு

சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் பொறுப்பு மாற்றம்- சரத்குமார் அறிவிப்பு

Published On 2023-01-27 09:17 GMT   |   Update On 2023-01-27 09:17 GMT
  • ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளராக சிவஞான குருநாதன் நியமிக்கப்படுகிறார்.
  • பாலமுருகன் சிவகங்கை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

சென்னை:

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளராக செயலாற்றி வந்த பன்னீர்செல்வம் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு ராமநாத புரம் மேற்கு மாவட்ட அவைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளராக சிவஞான குருநாதன் நியமிக்கப்படுகிறார்.

நெல்லை மாநகர் மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வந்த மாநில மாணவரணி துணைச் செயலாளர் நட்சத்திர வெற்றி நெல்லை மாநகர மாவட்ட பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அழகேசன் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

சிவகங்கை வடக்கு மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்த மலைக்கண்ணன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, பாலமுருகன் சிவகங்கை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News