தொப்பூர் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.4.50 லட்சம் பறிமுதல்
- உரிய ஆவணங்களை காட்டி பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என்று சின்னையாவிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பறிமுதல் செய்யப்பட்ட பணத்தினை தருமபுரி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தொப்பூர் சோதனை சாவடியில் தேர்தல் அதிகாரி ரஞ்சித் தலைமையில் நிலையான கண்காணிப்பு குழு பறக்கும் படையினர் இன்று காலை 11 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது ஒருவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் எடுத்துச் செல்வது தெரிய வந்தது.
உடனே அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்ததில் அந்த நபர் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சின்னையா என்பதும், அவர் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து வெள்ளை பன்றிகளை ஏற்றி வந்து சேலத்தில் விற்பனை செய்து விட்டு ஆவணங்கள் இன்றி ரூ.4.50 லட்சத்தை எடுத்து வந்தது தெரியவந்தது.
உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் என்பதால் அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் ஜெய செல்வத்திடம் நிலையான கண்காணிப்பு குழுவினர் ஒப்படைத்தனர். இதற்கான உரிய ஆவணங்களை காட்டி பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என்று சின்னையாவிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து தருமபுரி கோட்டாட்சியர் காயத்ரி உத்தரவின் பேரில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தினை தருமபுரி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை தருமபுரியில் ரூ.17 லட்சம் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.