தமிழ்நாடு

சீரமைப்பு பணிகளை தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் பார்வையிட்டு ஆய்வு.

தமிழ்நாட்டில் ரூ.25 கோடியில் புராதன கட்டிடங்கள் சீரமைப்பு பணி: தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம்

Published On 2024-02-09 05:21 GMT   |   Update On 2024-02-09 05:39 GMT
  • தஞ்சை அரண்மனை வளாகம் மராட்டி தர்பார் மண்டபத்தில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.
  • பழமை மாறாமல் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர்:

தஞ்சாவூரில் தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவன மாணவர்களுக்கு களப்பயிற்சி நடந்து வருகிறது.

இந்த பயிற்சியை தமிழ்நாடு தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் பார்வையிட்டார். பின்னர் தஞ்சை அரண்மனை வளாகம் மராட்டி தர்பார் மண்டபத்தில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-மதுரை திருமலை நாயக்கர் மகால், தரங்கம்பாடி கோட்டை, கவர்னர் மாளிகை என தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் ரூ. 25 கோடி மதிப்பில் புராதன கட்டிடங்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தஞ்சை அரண்மனை வளாக மராட்டா தர்பார் மண்டபம், சர்ஜா மாடி ஆகிய இடங்களில் பழமை மாறாமல் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை மேம்பாலம் அருகே சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணி நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News