தமிழ்நாடு செய்திகள்

மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசி பேராசிரியர் பாலியல் தொல்லை- போலீசார் விசாரணை

Published On 2022-12-18 16:11 IST   |   Update On 2022-12-18 16:11:00 IST
  • ஒரு கட்டத்தில் எல்லை மீறி போன பேராசிரியரின் ஆபாச பேச்சு மாணவியை அதிர்ச்சி அடையச் செய்தது.
  • புதுக்கோட்டையில் கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் அதே பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே கல்லூரியில் மற்றொரு துறையில் பயின்று வரும் மாணவர் ஒருவரை காதலித்து வருகிறார். இதற்கிடையே அந்த கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் பேராசிரியர் ஒருவர் பி.பி.ஏ. மாணவியின் செல்போன் எண்ணை அறிந்துகொண்டு அடிக்கடி தொடர்பு கொண்டு வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் எல்லை மீறி போன அவரது ஆபாச பேச்சு மாணவியை அதிர்ச்சி அடையச் செய்தது. போனில் பேசிய அவர் மாணவியை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். முதலில் தனது எதிர்காலம் குறித்து கவலை அடைந்த மாணவி, அந்த பேராசிரியரிடம் இதுபோல் என்னிடம் பேசாதீர்கள் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

ஆனாலும் அவர் தன்னை திருத்திக்கொள்ளவில்லை. நாளுக்கு நாள் பேராசிரியரின் செல்போன் பேச்சால் கடும் விரக்தியடைந்த மாணவி, நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேராக கல்லூரிக்கு சென்றனர். அவர்கள் வருவதை அறிந்த அவர் அங்கிருந்து வெளியேறி விட்டார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிளை மாணவியின் உறவினர்கள் அடித்து நொறுக்கினர்.

தகவல் அறிந்து அங்கு வந்த கல்லூரி நிர்வாகத்தினர் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் புகாருக்குள்ளான பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

இருந்தபோதிலும் பிரச்சினையின் தீவிரம் அறிந்த இந்திய மாணவர் சங்கத்தினர் புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசில் புகார் அளித்தனர். அப்போது இதுபோன்ற பல மாணவிகளிடம் அந்த பேராசிரியர் அத்துமீறியும், அநாகரீகமாகவும் பேசியதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவித்து இருந்தனர்.

அதன்பேரில் போலீசார் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், பேராசிரியர்கள் அடங்கிய குழுவினரும் இதுதொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க தயாராகி வருகிறார்கள்.

இதற்கிடையே மாணவியிடம் பேராசிரியர் ஆபாசமாக பேசியதை உறுதி செய்யும் வகையில் பாதிக்கப்பட்ட அந்த மாணவி, தனது தோழியிடம் பேசிய ஆடியோ ஒன்று வரைலாகி வருகிறது. அதில் எல்லோருக்கும் உடலுறவில் ஆசை இருக்கும், எனக்கும் அந்த ஆசை இருக்கிறது. நீ என்னை எவ்வளவு வேண்டுமானாலும் யூஸ் பண்ணிக்கோ..., ஆனால் என்னை விட அவன்கிட்ட (காதலன் பெயரை சொல்கிறார்) என்ன இருக்கு? அவன் காசு தாரேன்று சொன்னானா, அவன் வயித்துல புள்ளைய கொடுத்திட்டு ஏமாத்திருவான். நான் உனக்கு எல்லாமே பண்ணுவேன்னு சொல்ராறு என்கிறார்.

மேலும் அந்த பேராசிரியர் கேவலமா பாக்கிறாறு, கேவலமாக பேசுறாறு, கழுத்துக்கு கீழதான் பார்த்து பேசினார் என்று அந்த ஆடியோவில் அவர் தெரிவிக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவியை அங்கு பணியாற்றும் ஆசிரியர் சதீஷ் என்பவர் தன்னுடைய வீட்டுக்கு வருமாறு மிரட்டிய ஆடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் அந்த ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

அந்த பரபரப்பு அடங்குவதற்குள் புதுக்கோட்டையில் கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News