தமிழ்நாடு

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2-வது நாளாக மின் உற்பத்தி நிறுத்தம்

Published On 2023-06-01 08:26 GMT   |   Update On 2023-06-01 08:26 GMT
  • முதல்‌ பிரிவில்‌ தலா 210 மெகா வாட்‌ திறன்‌ கொண்ட 4 அலகுகளும்‌, 2-வது பிரிவில்‌ 600 மெகாவாட்‌ திறன்‌ கொண்ட ஒரு அலகும்‌ உள்ளது.
  • ஊழியர்கள் பழுதை சரி செய்யும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகின்றன.

மேட்டூர்:

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருதின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட 4 அலகுகளும், 2-வது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகும் உள்ளது. முதல் பிரிவு மூலம் 840 மெகாவாட் மின்சாரமும், 2-வது பிரிவில் 600 மெகாவாட் மின்சாரமும் என 2 பிரிவுகளிலும் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுதிறது.

இந்த நிலையில் நேற்று இரவு மேட்டூர் அனல் மின் நிலைய முதல் பிரிவில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக 2-வது பிரிவில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தடைபட்டது. இதை தொடர்ந்து ஊழியர்கள் பழுதை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிந்தவுடன் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என்று மேட்டூர் அனல் மின் நிலைய பொறியாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News