தமிழ்நாடு செய்திகள்

திருமுல்லைவாயலில் போலீஸ்காரர் "திடீர்" தற்கொலை

Published On 2023-10-24 11:54 IST   |   Update On 2023-10-24 11:54:00 IST
  • நேற்று இரவு ஜார்ஜ் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
  • அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஜார்ஜை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

திருநின்றவூர்:

திருமுல்லைவாயலில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜார்ஜ்(வயது29). இவர், ஆவடியில் உள்ள 5-வது பட்டாலியனில் ஆயதப்படை போலீஸ்காரராக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி பிரணா. இவர்களுக்கு 4 வயதில் தன்வி என்ற பெண் குழந்தை உள்ளது.

நேற்று இரவு ஜார்ஜ் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் வெளியே செல்ல வேண்டும் என்று மனைவியிடம் கூறி உள்ளார். இதனை மனைவி பிரணா கண்டித்து வெளியே செல்ல அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

பின்னர் ஜார்ஜ் படுக்கை அறைக்கு சென்றுவிட்டார். நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த மனைவி பிரணா சென்று பார்த்தபோது கணவர் ஜார்ஜ் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஜார்ஜை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜார்ஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News