தமிழ்நாடு

பெசன்ட் நகர் கடற்கரையில் சோலார் தகடு பொருத்திய பைபர் படகு கரை ஒதுங்கியது

Published On 2023-12-01 10:40 GMT   |   Update On 2023-12-01 10:40 GMT
  • போலீசார் விரைந்து விசாரணை நடத்தினர்.
  • மிதவை படகு எங்கிருந்து வந்தது என்ற தெரியவில்லை.

சோழிங்கநல்லூர்:

பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று காலை சோலார் தகடு பொருத்திய சிறிய மிதவை படகு கரை ஒதுங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் திருவான்மியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து விசாரணை நடத்தினர். அந்த சுமார் 30 அடி நீள முள்ள அந்த மதவையில் 3 சோலார் தகடுகள் இருந்தன. இந்த மிதவை படகு எங்கிருந்து வந்தது என்ற தெரியவில்லை.

அதனை கடலோர காவல் படையினர் மீன்வளத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News