தமிழ்நாடு

மின்சாரம்-குடிநீர் இன்றி தவிப்பு: மேயர் பிரியா வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

Published On 2023-12-08 09:25 GMT   |   Update On 2023-12-08 09:25 GMT
  • பெரம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழைநீர் வடியாமல் தேங்கி நின்றது.
  • சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் வீட்டை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை:

சென்னையில் பெய்த கனமழையால் தேங்கிய வெள்ளம் இன்னும் பல இடங்களில் வடியாமலேயே உள்ளது.

பெரம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழைநீர் வடியாமல் தேங்கி நின்றது. இதனால் மின்தடை ஏற்பட்டதுடன் மக்கள் குடிநீருக்கும் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து பெரம்பூர் ஜமாலியா பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் வீட்டை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களது பகுதிக்கு உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தண்ணீரை வெளியேற்ற தேவையான வசதிகளை செய்துதர வேண்டும் என்றும் கேட்டனர்.

இதையடுத்து மேயர் பிரியா அவர்களை சமாதானப்படுத்தினார். உங்கள் பகுதிக்கு மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பால் தண்ணீர் கிடைப்பதற்கும் வழி ஏற்படுத்தி தரப்படும் என்றும் உறுதி அளித்தார்.

இதையடுத்து முற்றுகை போராட்டத்தை வாபஸ் வாங்கிய பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News