தமிழ்நாடு செய்திகள்

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் காலமானார்

Published On 2023-02-24 22:33 IST   |   Update On 2023-02-24 22:33:00 IST
  • பெரியகுளத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிர் பிரிந்தது
  • ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து பெரியகுளம் விரைந்துள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் காலமானார். அவருக்கு வயது 96.

வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அவரது உடல்நிலை மோசமானதையடுத்து பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் இன்று இரவு பழனியம்மாளின் உயிர் பிரிந்தது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து பெரியகுளம் விரைந்துள்ளார்.

Tags:    

Similar News