தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும்: அலுவலக உதவியாளர் சங்கம் வலியுறுத்தல்

Published On 2023-10-20 10:04 GMT   |   Update On 2023-10-20 10:04 GMT
  • தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு மத்திய அரசு வழங்கியது போல 4 சதவிகித அகவிலைப்படி உடனடியாக வழங்க வேண்டும்.
  • 4 சதவிகித அகவிலைப்படி வழங்க வேண்டும் என முதலமைச்சரை அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

சென்னை:

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.மதுரம், அகில இந்திய தலைவர் கே.கணேசன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்கள், ஓய்வூதியர்கள் அனைவருக்கும் மத்திய அரசு வழங்கியது போல 4 சதவிகித அகவிலைப்படி உடனடியாக வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News