தமிழ்நாடு

குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றுதல் தொடர்பாக புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

Published On 2023-11-14 11:54 GMT   |   Update On 2023-11-14 11:54 GMT
  • புகார் தெரிவிக்க கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுஅறை 24 மணி நேரமும் இயங்கும்.
  • 2149 களப்பணியாளர்களுடன், மொத்தம் 542 இயந்திரங்கள் கழிவுநீர் அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்படும்.

குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றுதல் தொடர்பாக பொது மக்கள் புகார் தெரிவிக்க சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் உள்ள மக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 044-45674567, கட்டணமில்லா தொலைபேசி எண் 1916ல் பொது மக்கள் புகார் அளிக்கலாம் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், குடிநீர் வழங்கல், கழிவுநீரை அகற்றுதல் தொடர்பாபன புகார் தெரிவிக்க கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுஅறை 24 மணி நேரமும் இயங்கும் எனவும் 300 தூர்வாரும் இயந்திரங்கள், 66 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 176 ஜெட்ராடிங் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

2149 களப்பணியாளர்களுடன், மொத்தம் 542 இயந்திரங்கள் கழிவுநீர் அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்படும் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News