தமிழ்நாடு

சென்னையில் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ்

Published On 2023-05-31 14:05 GMT   |   Update On 2023-05-31 14:05 GMT
  • தண்ணீர் நிரப்பும் நிலையங்கள் தொடர்பான பிரச்சினையால் வேலைநிறுத்தம் போராட்டம் அறிவிப்பு.
  • கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் தண்ணீர் லாரிகள் நாளை வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு.

சென்னையில் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நடத்த இருந்த நிலையில், அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தண்ணீர் நிரப்பும் நிலையங்கள் தொடர்பான பிரச்சினையால் நாளை தண்ணீர் லாரிகள் இயங்காது என தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.

கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் தண்ணீர் லாரிகள் நாளை வழக்கம் போல் இயங்கும் என அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும், செயல்படாமல் இருந்த தண்ணீர் நிரப்பும் நிலையத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து சரி செய்ததால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News