தமிழ்நாடு

காலாண்டு வரி உயர்வை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு: 3,500 லாரிகள் ஓடவில்லை

Published On 2023-11-09 10:16 GMT   |   Update On 2023-11-09 10:16 GMT
  • வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.
  • போராட்டத்திற்கு தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

தருமபுரி:

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வு, காப்பீட்டு கட்டணம் உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு, காலாண்டு வரி உயர்வு, ஆன்லைன் அபராதம் ஆகியவற்றை உயர்த்தி உள்ளதால் இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த போராட்டத்திற்கு தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 3,500 லாரிகள் பங்கேற்கிறது. எனவே தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அந்தந்த பகுதிகளில் பாதுகாப்பாக லாரிகளை நிறுத்தி கொள்ளுமாறு தருமபுரி மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவரும், தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன மாநில துணைத் தலைவருமான நாட் டான் மாது தெரிவித்தார்.

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் குறிப்பிட்ட லாரிகளை தவிர மற்ற லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News