தமிழ்நாடு

திருவள்ளூர் கோவிலுக்கு வந்த வீரலட்சுமியிடம் நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதம்

Published On 2023-09-16 09:34 GMT   |   Update On 2023-09-16 09:34 GMT
  • பாதுகாப்பு பணியில் இருந்த திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் சமரசம் செய்ய முயன்றனர்.
  • புகார் விவகாரத்தில் என் மீது எவ்வளவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும் நான் தாங்கிக்கொள்வேன்.

திருவள்ளூர்:

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் கூறிய நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழக முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி குரல் கொடுத்தார். இந்த நிலையில் அவர் திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அங்கு வந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் சமரசம் செய்ய முயன்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

பின்னர் வீரலட்சுமி நிருபர்களிடம் கூறுகையில், நடிகை புகார் விவகாரத்தில் என் மீது எவ்வளவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும் நான் தாங்கிக்கொள்வேன். வீரலட்சுமி யார் என சீமானுக்கு தெரியாதா? சீமானுக்கு மட்டுமல்ல எனக்கும் கூட்டம் இருக்கிறது என்றார்.

Tags:    

Similar News