தமிழ்நாடு

இரவு நேரங்களில் வீதிகளில் சுற்றும் மர்ம நபர்கள்: சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் வைத்து போலீசார் விசாரணை

Published On 2023-10-25 10:06 GMT   |   Update On 2023-10-25 10:06 GMT
  • சத்தியமங்கலத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
  • மர்ம நபர்கள் வடமாநிலத்தவராக இருக்கலாம் என்றும், குற்ற சம்பவங்களில் தொடர்பு இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சத்தியமங்கலத்தில் முக்கிய வீதிகளான எஸ்.ஆர்.டி. கார்னர், வடக்குப்பேட்டை, கோட்டு வீராம் பாளையம், காந்திநகர், மணி கூண்டு உள்ளிட்ட முக்கிய வீதிகள் உள்ளன.

இந்நிலையில் நேற்று மணிக்கூண்டு அருகே உள்ள பெரிய பள்ளிவாசல் வீதியில் நள்ளிரவு ஒரு மணி அளவில் மர்ம நபர்கள் 2 பேர் அங்கும் இங்குமாக பரபரப்பாக நடந்து செல்வதும், ஓடுவதும் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து காலையில் வழக்கம் போல் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை பார்த்தபோது மர்ம நபர்கள் நடமாட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் அந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மர்ம நபர்கள் வடமாநிலத்தவராக இருக்கலாம் என்றும், குற்ற சம்பவங்களில் தொடர்பு இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து சத்தியமங்கலத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இரவு நேரம் ரோந்து பணியை தீவிரப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். 

Tags:    

Similar News