தமிழ்நாடு செய்திகள்

திருவண்ணாமலை அருகே தாய், மகன் தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-06-13 12:59 IST   |   Update On 2023-06-13 12:59:00 IST
  • விஜயிடம் ஏன் வேலைக்கு செல்லாமல் இப்படி குடித்துவிட்டு வருகிறாய் என்று ஜோதி கண்டித்தார்.
  • விஜய் தூக்கு போட்டுக்கொண்டது தெரியாமல் மகன் இப்படி உள்ளாரே என விரக்தியில் ஜோதியும் தூக்கு போட்டுக்கொண்டார்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ஜோதி. இவரது மகன் விஜய் (வயது 25). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு விஜய் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு வந்தார். இவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

விஜயிடம் ஏன் வேலைக்கு செல்லாமல் இப்படி குடித்துவிட்டு வருகிறாய் என்று ஜோதி கண்டித்தார்.

இதனால் விஜய் மன உளைச்சலில் காணப்பட்டார். நேற்று இரவு வீட்டின் அறையில் திடீரென விஜய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விஜய் தூக்கு போட்டுக்கொண்டது தெரியாமல் மகன் இப்படி உள்ளாரே என விரக்தியில் ஜோதியும் தூக்கு போட்டுக்கொண்டார்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் திருவண்ணாமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாய், மகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய் கண்டித்ததால் மகன் தூக்கு போட்டு கொண்டதும், மகன் இறந்தது தெரியாமல் தாயார் தூக்கு போட்டுக்கொண்டதும் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News