தமிழ்நாடு

நாளை மாலைக்குள் மழை நீர் அகற்றும் பணிகள் நிறைவடையும்- அமைச்சர் கே.என்.நேரு

Published On 2023-12-09 15:47 GMT   |   Update On 2023-12-09 15:55 GMT
  • சென்னையின் புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் வடியாத சூழலில் இருக்கிறது.
  • தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

மிச்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது.

இருப்பினும், சென்னையின் புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் வடியாத சூழலில் இருக்கிறது.

இந்நிலையில், மழை நீர் விரைவில் அகற்றப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

செய்தியளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில்," சென்னையில் 19 இடங்களில் இன்னும் தண்ணீர் அகற்றப்படாமல் உள்ளது. நாளை மாலைக்குள் இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

குப்பைகளை அடுத்த 2 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 நாட்களில் 20,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

சென்னையில் தினசரி 4600 லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்" என்றார்.

Tags:    

Similar News