தமிழ்நாடு

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இன்புளூயன்சா காய்ச்சல்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2022-09-28 03:27 GMT   |   Update On 2022-09-28 03:27 GMT
  • அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எச்1 என்1 வகை இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதியானது.
  • பருவநிலை மாற்றம் காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது

சென்னை:

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காய்ச்சல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு எச்1 என்1 வகை இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதனால், ஆஸ்பத்திரியிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

பருவநிலை மாற்றம் காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு இன்யுளூயன்சா காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. தற்போது, தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் வீடு திரும்புவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News