தமிழ்நாடு

கண்காணிப்பு கேமிராவில் பதிவான முகமூடி அணிந்த கொள்ளையர்களின் உருவப்படம்.

முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்து திருடும் கும்பல்- சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான கொள்ளையன் உருவம்

Published On 2023-08-18 04:10 GMT   |   Update On 2023-08-18 04:10 GMT
  • கடையின் எதிரே மற்றொரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவையும் உடைத்து சென்றுள்ளனர்.
  • அம்மா பேட்டையில் உள்ள ஒரு பத்திர எழுத்தர் கடையிலும் திருட்டு போனது குறிப்பிடத்தக்கது.

அம்மாபேட்டை:

அம்மாபேட்டை அருகே அந்தியூர் ரோட்டில் உள்ள குறிச்சி பிரிவில் தனியார் பேக்கரி கடை உள்ளது. நள்ளிரவில் இந்தக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லாவில் இருந்த ரூ.12 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் பேக்கரி திண்பொருள்களை மர்ம நபர்கள் அள்ளி சென்றுள்ளனர்.

கடையின் எதிரே மற்றொரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவையும் உடைத்து சென்றுள்ளனர்.

தொடர்ந்து அந்தியூர் ரோட்டில் மறவன் குட்டை மேட்டில் உள்ள ஒரு எலக்ட்ரிக் கடையில் பூட்டை உடைத்து அங்கிருந்து ரூ.3ஆயிரம் பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்திருந்த போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் இருந்த பதிவை பார்த்த பொழுது அதில் 3 மர்ம நபர்கள் முகமூடி அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்து பூட்டை உடைத்து கடைக்குள் செல்வது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதேபோல் நேற்று முன்தினம் இரவு அம்மாபேட்டை கரிய காளியம்மன் கோவில் அருகில் உள்ள ஆதிபராசக்தி கோவிலின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் அங்கிருந்த உண்டியலை திருடிச் சென்று அதில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு உண்டியலை காட்டில் வீசி சென்றுள்ளனர்.

இதேபோல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்தியூர் ரோட்டில் பட்டஞ்சாவடியில் உள்ள ஒரு கடையிலும், அம்மா பேட்டையில் உள்ள ஒரு பத்திர எழுத்தர் கடையிலும் திருட்டு போனது குறிப்பிடத்தக்கது.

அம்மாபேட்டை பகுதியில் முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்து திருடும் கும்பலால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News