தமிழ்நாடு

வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்ட காட்சி - காளைகள் சீறிப்பாய்ந்ததை காணலாம்

கந்தர்வகோட்டை அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்: அடக்க மல்லுக்கட்டிய வீரர்கள்

Published On 2024-03-15 06:38 GMT   |   Update On 2024-03-15 06:38 GMT
  • மாடுபிடி வீரர்கள் பரிசோதனைக்குப் பிறகே இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அனுமதிக்கப்பட்டனர்.
  • மாடு பிடி வீரர்கள் வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கினர்.

கந்தர்வகோட்டை:

கந்தர்வகோட்டை அடுத்த ஆதனக்கோட்டை மோட்டு முனீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. புதுக்கோட்டை வட்டாட்சியர் பரணி கொடியசைத்து ஜல்லிக்கட்டினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மருத்து துறையினரால் அனுமதிக்கப்பட்ட 100 மாடு பிடி வீரர்களும் 700 ஜல்லிக்கட்டு காளைகளும் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த காளைகள், கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்குப் பிறகு வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதேபோல், மாடுபிடி வீரர்களும் பரிசோதனைக்குப் பிறகே இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி.ர் ராகவி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர்.

இப்போட்டியில் மாடு பிடி வீரர்கள் வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கினர். மேலும், இப்போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பீரோ, எவர்சில்வர் பொருட்கள், மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர். ஜல்லிக்கட்டு விழாவை முன்னிட்டு மருத்துவ குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

Tags:    

Similar News