தமிழ்நாடு செய்திகள்

விருதுநகர்-குடியாத்தத்தில் ஒருங்கிணைந்த வணிகவரி கட்டிடம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Published On 2023-07-21 11:31 IST   |   Update On 2023-07-21 11:31:00 IST
  • கட்டிடங்களை காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
  • நிகழ்ச்சியில் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் சார்பில் விருதுநகர் மற்றும் குடியாத்தத்தில் 8 கோடியே 94 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப் பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள், தேனியில் 3 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகக் கட்டிடம் ஆகியவற்றை காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

மேலும் சேந்தமங்கலம் மற்றும் பள்ளியாடி ஆகிய இடங்களில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்களையும் திறந்து வைத்தார். மேலும், 7 புதிய வணிகவரி நிர்வாக கோட்டங்கள், 6 புதிய வணிகவரி நுண்ணறிவு கோட்டங்கள், 13 புதிய வணிகவரி மாவட்டங்கள் மற்றும் 2 புதிய பதிவு மாவட்டங்கள் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News