தமிழ்நாடு

12, 14-ந்தேதிகளில் தமிழகத்தில் கன மழை பெய்யும்- இந்திய வானிலை ஆய்வு மையம்

Published On 2024-05-10 04:23 GMT   |   Update On 2024-05-10 06:23 GMT
  • தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
  • 15-ந்தேதி வரை ஒருசில இடங்களிலும் கோடை மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை:

தமிழகத்தில் கடந்த 3 நாட்க ளாக ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. இத னால் ஓரளவு வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.

இன்று முதல் 13-ந்தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் ஒரு சில இடங்களில் 106 டிகிரியும் இதர சமவெளி பகுதிகளில் 102 டிகிரியும் வெயில் பதிவாகலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் 15-ந்தேதி வரை ஒருசில இடங்களிலும் கோடை மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வருகிற 12 மற்றும் 14-ந்தேதிகளில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News