தமிழ்நாடு

நெல்லையில் கனமழை: வீடுகள் இடிந்து 2 பேர் பலி

Published On 2023-12-18 05:13 GMT   |   Update On 2023-12-18 05:13 GMT
  • கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
  • தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

நெல்லை:

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ரெயில் நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. தாமிரபரணி ஆற்றிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. நெல்லை டவுன், பாளையங்கோட்டை, நகர்ப்பகுதிகளிலும் மழை நீர் தேங்கி உள்ளது.

இந்நிலையில் நெல்லையில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாளையங்கோட்டையில் கனமழையால் சிவகுமார் என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் இருந்து சிவகுமார் உடல் மீட்கப்பட்டுள்ளது.

இதுபோல் மேலப்பாளையம் நடராஜபுரம் பகுதியில் பட்டத்தி என்ற 75 வயது மூதாட்டி வீடு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

Tags:    

Similar News