தமிழ்நாடு

4 மாவட்டங்களில் ஆவின் பச்சை, ஆரஞ்சு நிற பால் பாக்கெட் நிறுத்தம்

Published On 2023-10-17 05:20 GMT   |   Update On 2023-10-17 05:20 GMT
  • ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் 4.5 சதவீதம் கொழுப்பு சத்துடன் ரூ.22-க்கு விற்பனை செய்யப்பட்டது.
  • பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பாக்கெட் நிறுத்தப்பட்டு புதிய நிற பாக்கெட் வினியோகிக்கப்படுவதாக பால் முகவர்கள் சங்க மாநில தலைவர் குற்றம் சாட்டினார்.

சென்னை:

ஆவின் நிறுவனத்திற்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் நஷ்டத்தால் செறிவூட்டப்பட்ட கொழுப்பு சத்து நிறைந்த பால் வகைகளை மாற்றி வேறு பெயரில் வினியோகம் செய்து வருகிறது.

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் 4.5 சதவீதம் கொழுப்பு சத்துடன் ரூ.22-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை ஒரு சதவீத கொழுப்பு சத்தை நீக்கி 3.5 சதவீதமாக ஆவின் டிலைட் (ஊதா நிறம்) என்ற பெயரில் விற்பனை செய்கிறது.

இதே போல ஆரஞ்சு பால் பாக்கெட்டில் 6 சதவீதமாக இருந்த கொழுப்பு சத்தை 5 சதவீதமாக குறைத்து மஞ்சள் நிற பாக்கெட்டில் ஆவின் கோல்டு என வினியோகிக்கப்படுகிறது.

தற்போது வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பாக்கெட் நிறுத்தப்பட்டு புதிய நிற பாக்கெட் வினியோகிக்கப்படுவதாக பால் முகவர்கள் சங்க மாநில தலைவர் பொன்னுசாமி குற்றம் சாட்டினார்.

பால் பாக்கெட் விலையை உயர்த்துவதற்கு பதிலாக மறைமுகமாக அதன் கொழுப்பு சத்து அளவை குறைத்து நஷ்டத்தை ஈடு செய்வதாக அவர் கூறினார். சென்னையில் பச்சை பாக்கெட் 50 சதவீதம் குறைக்கப்பட்டு ஊதா நிற பாக்கெட் வினியோகிக்கப்படுவதாகவும் அடுத்த மாதம் முழுமையாக நிறுத்த முடிவு செய்திருப்பதாகவும் கார்டுதாரர்களுக்கு அடுத்த மாதம் முதல் பச்சை பாக்கெட்டிற்கு பதிலாக ஊதா வழங்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

Tags:    

Similar News