தமிழ்நாடு

சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும்: கவர்னர் ஆர்.என்.ரவி

Published On 2024-04-13 10:00 GMT   |   Update On 2024-04-13 10:00 GMT
  • அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவில் மண்டபத்தில் சங்கரா விஜயம் என்ற விழா நடைபெற்றது.
  • நாம் அனைவரும் ஒன்று என்றே சனாதனம் கூறுகிறது

சென்னை:

சென்னை அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவில் மண்டபத்தில் சங்கரா விஜயம் என்ற விழா நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு சிறப்பாக பணியாற்றி வரும் கோவில் அர்ச்சகர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் விழாவில் பேசியதாவது:-

சனாதன தர்மம் எந்த ஒரு ஏற்றத்தாழ்வையும் வலியுறுத்தவில்லை. நாம் அனைவரும் ஒன்று என்றே சனாதனம் கூறுகிறது. பாரதம் என்பது சனாதனத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News