தமிழ்நாடு

பறக்கும் ரெயில் பாலம் விபத்து- ரெயில்வே நிர்வாகம் விளக்கம்

Published On 2024-01-18 16:31 GMT   |   Update On 2024-01-18 16:31 GMT
  • ரெயில்வே தூண் பாலம் இணைக்கும்போது சரிந்து விழுந்து விபத்து.
  • விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

சென்னை வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை இணைக்கும் பறக்கும் ரெயில் பணி நடைபெற்று வருகிறது.

ஆதம்பாக்கம் பகுதியில் நடைபெற்று வந்த பாலப்பணியின் போது இன்று மாலை திடீரென விபத்து ஏற்பட்டது.

அங்கு, ரெயில்வே தூண் பாலம் இணைக்கும்போது சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ரெயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஹைட்ராலிக் ஜாக்குகளைப் பயன்படுத்தி ஏவும்போது, கர்டர் ஒரு முனையில் தவறி கீழே விழுந்து விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

பணிகள் நடைபெறும் முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News