ஈரோடு இடைத்தேர்தல்- 6 முனை போட்டியை பார்க்க தயாராகும் வாக்காளர்கள்
- தே.மு.தி.க. சார்பில் ஆனந்த் போட்டியிடுகிறார்.
- அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் 6 முனை போட்டி உருவாகும் வாய்ப்பு உள்ளது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தே.மு.தி.க. சார்பில் ஆனந்த் போட்டியிடுகிறார்.
இது தவிர அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளனர். மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி, டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவையும் போட்டியிடுகிறது. இதுவரை உள்ள நிலவரப்படி 6 முனை போட்டி உறுதியாகி உள்ளது.
இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 936 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 934 பேர். பெண்கள் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 987 பேர். 3-ம் பாலினத்தவர்கள் 15 பேர்.
2 லட்சம் வாக்காளர்களும் 6 முனை போட்டியை பார்க்க தயாராக இருக்கிறார்கள்.