தமிழ்நாடு

ஸ்ரீபெரும்புதூரில் "என்கவுண்ட்டர்" செய்யப்பட்ட ரவுடி ரவியின் கடிதத்தால் பரபரப்பு

Published On 2023-09-17 02:42 GMT   |   Update On 2023-09-17 02:42 GMT
  • உள்துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு கடந்த 28-ந்தேதியன்று ரவுடி விஷ்வா எழுதியதாக தகவல் வெளியாகி வருகிறது.
  • காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றபோது, கையெழுத்து வாங்காமல் சுட்டு விடலாமா? என கேட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூரில் நேற்று என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடி விஷ்வா இறப்பதற்கு முன் எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அவர் எழுதி உள்ள கடிதத்தில், என்மீது போலி என்கவுண்ட்டர் நடந்தால் அதற்கு ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் பரந்தாமன், உதவி காவல் ஆய்வாளர் தயாளன் தான் பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளது.

இந்த கடிதம் உள்துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு கடந்த 28-ந்தேதியன்று ரவுடி விஷ்வா எழுதியதாக தகவல் வெளியாகி வருகிறது.

காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றபோது, கையெழுத்து வாங்காமல் சுட்டு விடலாமா? என கேட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரவுடி விஷ்வா கடிதம் எழுதியதாக கூறப்படும் தகவல் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News