தமிழ்நாடு

தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் சிக்கியது

Published On 2024-03-21 05:26 GMT   |   Update On 2024-03-21 05:26 GMT
  • வேலகவுண்டம்பட்டி மானத்தி பிரிவு ரோடு அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
  • எலச்சிப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் சிக்கியது.

பரமத்திவேலூர்:

பாராளுமன்ற தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் வாகன சோதனையும் நடத்தி வருகின்றனர். இதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

அந்த வகையில் இன்று நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி மானத்தி பிரிவு ரோடு அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கேரளாவில் இருந்து நாமக்கல்லுக்கு முட்டை லோடு ஏற்றிச் செல்ல வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரி டிரைவர் கேரளா எர்ணாகுளம் பாரிஸ் பகுதியைச் சேர்ந்த அஸ்லாம் (27) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சம் வைத்திருந்தார். இந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பரமத்தி வேலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் எலச்சிப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இன்று அதிகாலை பறக்கும் படையினரின் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் சிக்கியது. இந்த பணத்தை அதிகாரிகள் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். அதுபோல் திருச்செங்கோடு- மோர்பாளையம் சாலையில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News