தமிழ்நாடு

பல்லடம் அருகே கிரஷர் நிறுவனத்தில் சிலிண்டர் வெடித்து டிரைவர் பலி

Published On 2023-09-08 07:36 GMT   |   Update On 2023-09-08 07:36 GMT
  • இன்று காலை கிரஷருக்கு பயன்படுத்தும் சிலிண்டரை வண்டியில் இருந்து தொழிலாளர்கள் சிலர் இறக்கி கொண்டிருந்தனர்.
  • தாசநாயக்கன் பாளையத்தை சேர்ந்த டிரைவர் சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான கிரஷர் நிறுவனம் உள்ளது.

இந்தநிலையில் இன்று காலை கிரஷருக்கு பயன்படுத்தும் சிலிண்டரை வண்டியில் இருந்து தொழிலாளர்கள் சிலர் இறக்கி கொண்டிருந்தனர். அப்போது சிலிண்டர் வெடித்து திடீரென பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் தாசநாயக்கன் பாளையத்தை சேர்ந்த டிரைவர் சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த 2 பேரையும் மீட்டு சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உயிரிழந்த சதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News