தமிழ்நாடு

வாக்களிப்பது உரிமை மட்டுமல்ல கடமை: மாவட்ட தேர்தல் அதிகாரி

Published On 2024-04-19 04:52 GMT   |   Update On 2024-04-19 04:52 GMT
  • மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
  • ஜனநாயக கடமை ஆற்றுவது நமது கடமை. அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

சென்னை:

இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல் இன்று தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தனது வாக்கை பதிவு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஓரிரு இடங்களில் தொடக்கத்தில் எந்திர பிரச்சனை வந்தது. அது உடனடியாக சரி செய்யப்பட்டது.

கண்ட்ரோல் ரூமில் இருந்து 65 விழுக்காடு பதட்டமான வாக்குச்சாவடிகளை கவனித்து வருகிறோம்.

இன்றைய சிறப்பு என்னவென்றால், நடைபெறும் தேர்தலில் பணிபுரியும் 18 ஆயிரம் பணியாளர்களில் 11 ஆயிரம் பெண் பணியாளர்கள் பெண்கள் தான். 8 ஆயிரம் ஆண்கள் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். 57 விழுக்காடு பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

16 பெண்களுக்கென ஒரு பூத் உள்ள நிலையில் 1461 பூத்கள் முழுமையாக பெண்களால் வாக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. அடுத்து 6 மணி வரைக்கும், 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு நிலவரம் குறித்து அதிகாரிகள் தெரிவிக்கப்படும்.

மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாக்களிக்க உதவி செய்து வருகின்றனர்.

பாராளுமன்ற தேர்லில் கடந்த முறை தமிழ்நாட்டில் 73 விழுக்காடு வாக்குப்பதிவு பதிவானது. இந்தியாவில் 67 விழுக்காடு வாக்குப்பதிவு பதிவானது.

வாக்களிப்பது உங்கள் உரிமை மட்டுமல்ல கடமை. ஜனநாயக கடமை ஆற்றுவது நமது கடமை. அனைவரும் வாக்களிக்க வேண்டும். பொதுமக்கள் மிகத்திரளாக வந்து வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.

Tags:    

Similar News