தமிழ்நாடு

உயிரிழந்த குழந்தை உடல் தந்தையிடம் ஒப்படைப்பு- தலைமறைவான சென்னை தம்பதியை பிடிக்க போலீசார் தீவிரம்

Published On 2023-01-07 06:56 GMT   |   Update On 2023-01-07 06:56 GMT
  • ஹாசினி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது சுவற்றில் வீசி கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
  • தப்பியோடிய சக்திவேல்-ஹேமலதா ஆகியோரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகர் 3-வது தெருவில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர், சென்னை பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் என கூறி ஒரு தம்பதியினர் குடியேறினர்.

அவர்கள் சக்திவேல் என்ற திலீப்குமார், ஹேமலதா என்ற பெயரில் ஹாசினி(வயது 2) என்ற குழந்தையுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். பின்னர் அவர்கள் அப்பகுதியில் வேலைக்கு சென்று வந்தனர்.

இந்நிலையில் குழந்தை ஹாசினி வீட்டு சுவரில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்ததாக கூறி, கடந்த மாதம் 31-ந்தேதி நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், விளையாடிக்கொண்டிருந்தபோது ஹாசினி தவறி கீழே விழுந்துவிட்டதாக அந்த தம்பதி தெரிவித்தனர். சுமார் 4 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில் கடந்த 4-ந்தேதி ஹாசினி உயிரிழந்தார்.

இதனிடையே 3-ந்தேதி மாலை தங்களை பெற்றோர் என கூறி வந்த தம்பதி தலைமறைவாகினர். இதனால் ஆலங்குளம் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. தலைமறைவான 2 பேரும் ஹாசினிக்கு உண்மையான பெற்றோர் தானா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

இதற்கிடையே ஹாசினியின் உண்மையான தந்தையான பெங்களூருவை சேர்ந்த திலீப்குமார் தகவல் அறிந்து ஆலங்குளத்திற்கு வந்து ஹாசினி உடலை பெற்று அடக்கம் செய்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஹேமலதாவுக்கும், அவருக்கும் திருமணமாகி சில காரணங்களால் பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News