பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடியாக உள்ளது. 20 கன அடி நீர் வருகிறது.
- மழை பெய்து வருவதால் விவசாயிகள் மும்முரமாக விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கூடலூர்:
பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில் முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் தேனி மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக நெல் சாகுபடிக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கடந்த சில நாட்களாக 900 கன அடி நீர் திறக்கப்படுகிறது. குடிநீருக்காக 100 கன அடி என மொத்தம் 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் 127.75 அடியாக உள்ளது. 799 கனஅடி நீர் வருகிறது. மழை பெய்து வருவதால் விவசாயிகள் மும்முரமாக விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அணையின் நீர்மட்டம் உயரும்பட்சத்தில் குடிநீர் மற்றும் நெல் சாகுபடிக்கு தொடர்ந்து தண்ணீர் தடையின்றி கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடியாக உள்ளது. 20 கன அடி நீர் வருகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 82.20 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 6 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 29.6, தேக்கடி 28.2, கூடலூர் 3.8, உத்தமபாளையம் 0.8., வீரபாண்டி 2.8, அரண்மனைபுதூர் 5.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.