தமிழ்நாடு

தொடரும் பட்டாசு ஆலை விபத்துகள்...

Published On 2023-10-09 09:12 GMT   |   Update On 2023-10-09 09:12 GMT
  • கடந்த வாரம் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் வாணவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது.
  • அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடைக்கு கன்டெய்னர் லாரியிலிருந்து வெடிகளை இறக்கியபோது ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர்.

பொதுவாக பட்டாசு ஆலைகளில் தீ விபத்து நடந்தால் தீ வேகமாக பரவுவதாலும், வெடிகள் வெடிப்பதாலும் அருகில் சென்று தீயை அணைப்பது சிரமமானதாகும். இதனால் பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன. பட்டாசு ஆலைகளை இயக்குவதற்கு அரசு வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் முறையாக கடைபிடிக்கப்படாததாலும் விபத்துகள் நிகழுகின்றன.

கடந்த வாரம் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் வாணவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் வாணவெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் வாணவெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடைக்கு கன்டெய்னர் லாரியிலிருந்து வெடிகளை இறக்கியபோது ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். கடை உரிமையாளர் உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். மேலும், 11 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

Tags:    

Similar News