தமிழ்நாடு

ஆர்டலி முறை கூடாது... மத்திய ரிசர்வ் படைக்கு உத்தரவு பிறப்பித்த சென்னை ஐகோர்ட்

Published On 2022-11-18 09:16 GMT   |   Update On 2022-11-18 09:16 GMT
  • ஆர்டலி முறையை பின்பற்றுவதாக புகார் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை
  • காவலரை பணிநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

சென்னை:

ஆர்டலி முறையை ஒழித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆர்டலி முறையை பின்பற்றுவதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பித்தது. ஆர்டலியாக பணியாற்ற மறுத்த காவலரை பணிநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்பட்டது. 

Tags:    

Similar News