தமிழ்நாடு

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்த நூர்முகமதுவை காணலாம்.

42-வது முறையாக வேட்பு மனுத்தாக்கல் செய்தார் கோவை தேர்தல் மன்னன்

Published On 2024-03-20 08:18 GMT   |   Update On 2024-03-20 08:18 GMT
  • பாராளுமன்றம், சட்டமன்றம் என எந்த தேர்தல் வந்தாலும் முதல் ஆளாக இவர் வேட்பு மனுத்தாக்கல் செய்து விடுவார்.
  • ஜனநாயம் செத்து விட்டது என்பதை உணர்த்துவதற்காக சவப்பெட்டியுடன் வந்ததாக தெரிவித்தார்.

கோவை:

கோவையில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்கியது. கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் நூர்முகமது. இவர் கோவையின் தேர்தல் மன்னனாக அறியப்படுகிறார். பாராளுமன்றம், சட்டமன்றம் என எந்த தேர்தல் வந்தாலும் முதல் ஆளாக இவர் வேட்பு மனுத்தாக்கல் செய்து விடுவார்.

தற்போது பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியதை அடுத்து இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது அவர் சவப்பெட்டியுடன் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்தை நோக்கி வந்தார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சவப்பெட்டியை பறிமுதல் செய்தனர்.

பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடுவதற்காக, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நூர்முகமது மனுத்தாக்கல் செய்தார். இவர் 42-வது முறையாக தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். கடந்த 1996-ம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு தேர்தல்களிலும் இவர் போட்டியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, தற்போது 42-வது முறையாக, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளேன். ஜனநாயம் செத்து விட்டது என்பதை உணர்த்துவதற்காக சவப்பெட்டியுடன் வந்ததாக தெரிவித்தார். 

Tags:    

Similar News