தமிழ்நாடு

சென்னை தனியார் நிறுவன பெண் ஊழியரை கொன்று வீசிய சப்-இன்ஸ்பெக்டரின் மகன்- 8 மாதத்தில் கசந்துபோன காதல்

Published On 2023-01-28 08:03 GMT   |   Update On 2023-01-28 08:17 GMT
  • சிதம்பரத்தை சேர்ந்த குணப்பிரியா சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
  • நண்பர் வீட்டில் தங்க வைத்ததால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

வேலூர்:

வேலூர் பாலமதி மலையில் உள்ள பாறை இடுக்கு பள்ளத்தில் நேற்று காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

பிணமாக கிடந்த பெண்ணின் முகம் சிதைக்கப்பட்டிருந்தது. அவர் சுடிதார் அணிந்திருந்தார். கழுத்தில் தாலி இருந்தது. அவர் யார் என்பது தெரியவில்லை. அவரை கொலை செய்து பாறை மேல் இருந்து தூக்கி வீசி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

போலீசார் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் கொலை செய்து வீசப்பட்ட பெண் யார் என விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்ட பெண் சிதம்பரத்தைச் சேர்ந்த குணப்பிரியா என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக சிதம்பரத்தைச் சேர்ந்த அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து குணப்பிரியாவின் உடலை அடையாளம் காட்டினர்.

வேலூரை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகன் கார்த்தி (வயது22) என்பவர் 8 மாதங்களுக்கு முன்பு குணப்பிரியாவை திருமணம் செய்துள்ளார். அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் கார்த்தி குணப்பிரியாவை அடித்துக் கொன்று மலையில் இருந்து தள்ளியது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர்.

சிதம்பரத்தை சேர்ந்த குணப்பிரியா சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவருடன் இன்ஸ்ட்ரா கிராமில் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தோம். எனது வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குணப்பிரியாவை காதல் திருமணம் செய்தேன். எனது வீட்டில் எங்களை சேர்க்கவில்லை. இதனால் வேலூர் ஜீவா நகர் பகுதியில் உள்ள நண்பர் வீட்டில் தங்கியிருந்தோம்.

மேளம் அடிக்கும் வேலைக்கு சென்று வந்தேன்.

குணப்பிரியா 7 மாத கர்ப்பிணியானார். நண்பர் வீட்டில் தங்க வைத்ததால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

கடந்த மாதம் அவரது தாய் வீட்டிற்கு சென்றார். கடந்த 25-ந்தேதி வேலூர் வந்தார். அவரை பாலமதி மலைக்கு அழைத்து சென்றேன்.

வேலூரில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து நாம் குடியேறலாம் என குணப்பிரியா தெரிவித்தார். இது தொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த நான் அங்கிருந்த கட்டையை எடுத்து அவரது தலையில் அடித்தேன். இதில் குணப்பிரியா இறந்து விட்டார். பின்னர் மலையில் இருந்து தள்ளி விட்டு வந்து விட்டேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News