தமிழ்நாடு செய்திகள்

சந்திரபாபு நாயுடு கைது: திருப்பதி பஸ்கள் திருத்தணியில் நிறுத்தம்

Published On 2023-09-09 12:05 IST   |   Update On 2023-09-09 12:05:00 IST
  • சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து பல்வேறு இடங்களில் அவருடைய தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • காஞ்சிபுரத்தில் இருந்து ஏராளமானோர் விடுமுறைக்காக திருப்பதி செல்வது வழக்கம்.

காஞ்சிபுரம்:

ஆந்திர மாநிலம் தெலுங்கு தேச கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வர் ஆன சந்திரபாபு நாயுடு இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். கைது கண்டித்து பல்வேறு இடங்களில் அவருடைய தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் இருந்து ஏராளமானோர் விடுமுறைக்காக திருப்பதி செல்வது வழக்கம். அந்த வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் திருப்பதி, நகரி, புத்தூர், ரேணிகுண்டா உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படும். தற்போது பதட்டமான சூழ்நிலை காணப்படுவதால் காஞ்சிபுரம் மண்டலம் சென்னை மண்டலம் பேருந்துகள் திருத்தணி வரை மட்டுமே செல்லும் எனவும் ஆந்திர எல்லைப் பகுதிகளுக்கு செல்லாது என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

Tags:    

Similar News